சென்னை: தமிழில் ‘ராக்கதன்’, ‘மேதகு’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்த பிரவீன் குமார் (28), நேற்று காலை 6.30 மணியளவில் உடல்நிலை பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு நேற்று முன்தினம் மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். பிரவீன் குமாரின் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது. கடந்த 1ம் தேதி காலமான பாடகி உமா ரமணன் (72) இறுதிச் சடங்கு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
135