மும்பை: ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரெய் கோஸ்ச்சீவ்வை காதலித்து மணந்தார் நடிகை ஸ்ரேயா. இதையடுத்து அவர் வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஆனாலும் அவர் சினிமாவை மறக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஸ்ரேயா குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஒருசில பாலிவுட் சினிமாவில் நடித்துவரும் அவர், நேற்று மும்பை நகரில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது ஸ்ரேயா, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான உடையை அணிந்திருந்தார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் இவருக்கு 40 வயது என்றால் நம்ப முடிகிறதா என்று கமெண்ட்டை பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் விருது நிகழ்ச்சியில் இவ்வளவு கிளாமர் தேவையா என்றும் விமர்சித்துள்ளனர். தொடர்ந்து பட விழாக்களுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் கவர்ச்சி உடை அணிந்து வருவதை ஸ்ரேயா வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது தோற்றத்தை பெரும்பாலான ரசிகர்கள் ரசித்தாலும், சிலர் கடுமையாக அவரை விமர்சித்தும் வருகிறார்கள். இதையெல்லாம் தான் கண்டுகொள்வதில்லை என சமூக வலைத்தளத்தில் ஸ்ரேயா கூறியுள்ளார்.