புதுடெல்லி: கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூட்டப்பட்டபோது, மக்களுக்கு மாற்று பொழுதுபோக்கு அம்சமாக அமைந்தது ஓடிடி தளங்கள்தான். தியேட்டரில் ஒரு படத்தை குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவாகிவிடுகிறது. இதுவே ஓடிடியில் வருடத்துக்கு ரூ.1.500 செலுத்தி, கணக்கில்லாமல் படங்களை பார்த்துக்கொள்ளலாம் என்ற சலுகை மக்களை ஈர்த்தது. இதனால். தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது. பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் மட்டும் தியேட்டர்கள் நிரம்பி வழிகிறது. அதுவும் சில நாட்களுக்கே அந்த நிலை. மீண்டும் ரசிகர்கள் ஓடிடி பக்கம் திரும்பிவிடுகிறார்கள். இதனால் ஓடிடி நிறுவனம் வழங்கும் சந்தா திட்டத்தை போல், தியேட்டர்களிலும் இந்த திட்டத்தை கொண்டு வர பிவிஆர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, ஒருவர், ரூ.699 சந்தா செலுத்தினால் திங்கள் முதல் வியாழன் வரை பிவிஆர் தியேட்டர்களில் மாதத்துக்கு 10 படங்களை பார்த்துக்கொள்ளலாம். இந்த திட்டம் முதல் கட்டமாக டெல்லி, மும்பையில் அமலாகும் என தெரிகிறது. அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்த பிவிஆர் திட்டமிட்டுள்ளது.
ஓடிடி போட்டியை சமாளிக்க திட்டம் ரூ.699க்கு 10 படங்கள் பார்க்கலாம்: பிவிஆர் தியேட்டர் ஏற்பாடு
141