மும்பை: இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், தான் உயிருடன் இருப்பதாக நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். ஆபாச நடிகை பூனம் பாண்டே, கர்பப்பை புற்றுநோயால் நேற்றுமுன்தினம் மரணம் அடைந்ததாக இன்ஸ்டாகிராமில் அவரது ேமனேஜர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். அதே சமயம், அவருக்கு நோய் பாதிப்பு என்றால், 3 தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சியாக பங்கேற்றுள்ளார். அது எப்படி சாத்தியமாகும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
அவரது உடல் எங்கே? என்றும் சந்தேகத்தை கிளப்பினர். இந்நிலையில் நேற்று பகல் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பூனம் பாண்டே வெளியிட்டார். அதில் அவரே பேசியுள்ளார். அவர் பேசும்போது, ‘நான் சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறேன். கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்தேன். இதற்காக நான் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.