ஐதராபாத்: பிரபாஸின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வித்தியாசமான முறையில் பிரம்மாண்ட கட் அவுட்டை வைத்து கொண்டாடினர். பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஐதராபாத்தில் உள்ள குகபள்ளி எனும் இடத்தில் நேற்றுமுன்தினம் ஒன்று திரண்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரபாஸின் பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் மற்றும் பூக்கள் தூவி பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். அப்போது அங்கு ஒன்று கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் பிரபாஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸின் பிறந்த நாளிற்கு அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஜூனியர் என்டிஆர், கியரா அத்வானி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரபாஸ் நடிப்பில் வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி அன்று ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ வெளியாகிறது. இதைத் தொடர்ந்து ‘கல்கி 2898AD’ மற்றும் ‘ஸ்பிரிட் ‘ ஆகிய பான் இந்தியா படங்களிலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படங்கள் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.