அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ரெட் சில்லிஸ் தயாரிக்கும் இப்படம், வரும் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஷாருக்கான் கூறுகையில், ‘தற்போது நான் நடித்து முடித்துள்ள ‘ஜவான்’ படம், திரையுலகில் புதுவிதமான படைப்பு என்று உறுதியாக சொல்வேன். இயக்குனர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இப்படத்தைப் பொறுத்தவரையில், அட்லீ மற்றும் அவரது குழுவினர் அனைவரும் செம மாஸ். படப்பிடிப்பில் அவர்களின் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. இதில் நடித்துள்ள நயன்தாரா ரொம்ப அழகானவர், இனிமையானவர். அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது. விஜய் சேதுபதி ரொம்ப அடக்கமான மனிதர், மிகச்சிறந்த நடிகர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். தவிர அட்லீயும், அனிருத்தும் இணைந்து என்னை தமிழில் சில பாடல் வரிகளைப் பாட வைத்துள்ளனர். நானும் அந்த வரிகளை சரியாக உச்சரித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்’ என்றார்.