சென்னை: அட்லி மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு அவர், மற்ற படங்களில் இருந்து காப்பி அடித்து படங்களை இயக்குகிறார் என்பது தான். உதாரணமாக, ராஜா ராணி, மௌன ராகம் படத்தின் காப்பி என்றும், தெறி சத்ரியன் படத்தின் காப்பி என்றும், மெர்சல் அபூர்வ சகோதரர்களின் காப்பி எனவும் நெட்டிசன்களும், விமர்சகர்களும் விமர்சித்து வந்தனர். அதன்பின்னர் வந்த பிகில், ஜவான் படத்தின் சீன்கள் எல்லாம் வெவ்வேறு படங்களில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த காப்பி கேட் சர்ச்சை குறித்து இயக்குனர் அட்லி பேட்டியளித்துள்ளார்.
அதில், ‘நான் ஒருபோதும் வேண்டுமென்றே எந்த படத்தையும் காப்பி அடிக்கவில்லை. ஆனால் ஒரே மாதிரியான கருத்துகள் பல படங்களில் இயல் பாகவே உள்ளன. காதல் படங்கள், போலீஸ் கதை, கிராமப்புற கதைகள் என வெவ்வேறு பிரிவுகளில் நான் நேர்மையாக வேலை செய்தபோது என்னை மட்டுமே தாக்கி விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன’ என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘ஷாருக்கானையும், விஜய்யையும் வைத்து டபுள் ஹீரோ படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான சூழல் சரியாக அமைந்தால், எனது அடுத்த படம் விஜய் – ஷாருக்கான் கூட்டணியில் அமையும்’ என்றார்.