சென்னை: ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் தமன்னாவை மீண்டும் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாற்றி இருக்கிறது. தற்போது தமன்னா அவரது சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதுவரை ரசிகர்கள் பார்க்காத புகைப்படங்கள் அவை. அதில் ஒரு படத்தில் மணலில் முழு உடலையும் புதைத்து ஒரு போட்டோவை தமன்னா வெளியிட்டு இருக்கிறார். தமன்னாவா இப்படி என ரசிகர்கள் அதை பார்த்து ஷாக் ஆகி இருக்கின்றனர்.
ஏன் இப்படி செய்கிறார் என்றும் ரசிகர்கள் கேட்கின்றனர். இதற்கு பதிலளித்த தமன்னா, ‘இது ஒரு வகையான மெடிடேஷன்தான். இதனால் உடலுடன் மனமும் லேசாகிறது. இதை ஸ்பெயின் நாட்டுக்கு சென்றபோது கற்றுக்கொண்டேன். இனி மாதந்தோறும் இதுபோன்ற பயிற்சியை ெசய்வேன். விஜய் வர்மாவுக்கும் இதுபற்றி சொல்லி இருக்கிறேன். இந்த பயிற்சியை மேற்கொள்ள அவரும் ஆவலாக இருக்கிறார்’ என்றார்.