ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ படத்தை இயக்கிய பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன், அடுத்து முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸ், ஹீரோவாக அவரது தம்பி எல்வின் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றை தயாரிக்கிறார். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டைரி’ படத்தை இயக்கியிருந்த இன்னாசி பாண்டியன் இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்,
பிரபல தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ். ஆர்.சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கேபிஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசை அமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் தென்காசி, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடக்கிறது. இன்னாசி பாண்டியன் கூறுகையில், ‘முதலில் இக்கதையை இயக்க திட்டமிட்டேன். அது முடியவில்லை. தற்போது என் இரண்டாவது படமாக இயக்குகிறேன்’ என்றார்.