சென்னை: ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற வெற்றிப் படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தையும் இயக்கியுள்ள கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரொடக்ஷன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கட்டா குஸ்தி’, ‘எப்ஐஆர்’ போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள ‘ஆர்யன்’ படமும் அதிக பொருட்செலவில், ஆக்ஷன் பொழுது போக்குத் திரைப்பபடமாக உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகவுள்ள படம், உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.