அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் என விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டைப் பெற்ற படம். திரைப்டம் தியேட்டரிலேயே 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 75 நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 50 கோடிக்கும் அதிகமான வசூல் மழையை குவித்தது.
இந்நிலையில், அந்த படத்தையும் இதுவரை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் எப்போ என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பினை சோனி நிறுவனமே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.