திரைக்கு வந்த ‘யாத்திசை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த சித்து குமரேசன், தற்போது ஹீரோயின் ஆகியுள்ளார். அறம் புரொடக்ஷன் சார்பில் பி.ராமலிங்கம் தயாரிக்கும் படத்துக்கு ‘P-2’ என்று வித்தியாசமாக டைட்டில் வைத்துள்ளனர். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஹீரோவாக நடித்துள்ள மனோஜ் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத் ராம், தீபா, அஸ்மிதா நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைக்கிறார்.
நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘எனக்கு ‘யாத்திசை’யில் நல்ல அறிமுகம் கிடைத்தது. அதில் நான் நடித்ததைப் பார்த்து இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது வரலாற்றுப் படம், இது சமகாலத்தில் நிகழும் சம்பவங்களைக் கொண்ட படம். மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறது’ என்றார், சித்து குமரேசன்.