சென்னை: பூஜா ஹெக்டே, தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ என்ற படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். பின்னர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’, சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’ படங்களில் நடித்து பிசியானார். தற்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே, அடுத்தபடியாக இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஆக்ஷன் படமொன்றில் நடிக்கப் போகிறார்.
இதற்காக பயிற்சியாளர் மூலம் குத்துச் சண்டை மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, ‘சல்மான் கானுடன் நடித்த பிறகு இந்தியில் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. அனைத்தும் பேச்சுவார்த்தை கட்டத்தில் உள்ளது. இதில் ஒரு படம்தான், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடிக்கிறேன். இதில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் மார்ஷல் ஆர்ட்ஸ் கற்று வருகிறேன். இது புது அனுபவமாக உள்ளது’ என்றார்.