ஐதராபாத்: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம், தெலுங்கில் டப் ஆகி வெளியாக உள்ளது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மலையாள சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்திய பாக்ஸ் ஆபிசில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 2005ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 6ம் தேதி தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஏற்கனவே பிரேமலு மலையாள படமும் தெலுங்கில் டப்பிங் ஆகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.