சென்னை: ‘காந்தாரா’ பட பாணியில் உருவாகியுள்ளது ‘ரூபன்’. ஏகேஆர் பியூச்சர் பிலிம் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரூபன்’. இப்படத்தை கே. ஆறுமுகம் இளங்கார்த்திகேயன், எம்.ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 19 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவருகிறது.
‘காந்தாரா’, ‘அனுமான்’ போன்ற வெற்றி படங்களில் வரிசைகளில் சபரிமலை ஐயப்பனை மையமாக வைத்து கமர்சியல் கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் ஹீரோவாக விஜய் பிரசாத், ஹீரோயின் காயத்ரி மற்றும் சார்லி, ராமர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இத்தகவலை இப்பட இயக்குனர் ஐயப்பன் எஸ். தெரிவித்துள்ளார்.