சென்னை: தங்கர் பச்சான் இயக்கத்தில் நந்திதா தாஸ் நடித்த ‘அழகி’ படம் ரீரிலீஸ் ஆகிறது. உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் வழங்கும் ‘அழகி’ மிக முக்கியமான திரைப்படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வரும் 29ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளது. பார்த்திபன், நந்திதா தாஸ் நடித்த இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இது குறித்து நந்திதா தாஸ் கூறும்போது, ‘பல தலைமுறைகளாக தனது பெருமையை உலகமெங்கும் தக்க வைத்துக்கொண்ட ஒரு கவிதையான படம் ‘அழகி’.
டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட (4K தொழில்நுட்பம் மற்றும் 5.1 ஒலிப்பதிவு) இந்தப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்காக தயாரிப்பாளர் உதயகுமார், இயக்குனர் தங்கர் பச்சான் மற்றும் மீனாட்சி சுந்தரம், கே.எம்.சுந்தரம் பிக்சர்ஸ் ஆகியோர் மேற்கொள்ளும் முயற்சிகளை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கர் பச்சான் அழைத்தால் அவருடன் மீண்டும் ஒரு படத்தில் பணியாற்ற ஆசைப்படுகிறேன். மனித உணர்வுகளை காட்சிகளாக மாற்றும் திறமை படைத்தவர் அவர்’ என்றார்.