மும்பை: மொராக்கோ நிலநடுக்கத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகை நோரா ஃபதேஹி நன்றி தெரிவித்துள்ளார். மொராக்கோ நாட்டின் ரபாட், காசாபிளாங்கா உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 2,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி வெளியிட்ட பதிவில், ‘மொராக்கோவுக்கு இதயப்பூர்வமான இரங்கல், ஆதரவு கரம் நீட்டிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மொராக்கோ மக்கள் தங்களுக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். ஜெய் ஹிந்த்!’ என்று பதிவிட்டுள்ளார்.