சிட்னி: ஆஸ்திரேலியாவில் மம்மூட்டியின் படம் அச்சிட்ட தபால்தலை வெளியிடப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 300க்கு அதிகமான படங்களில் நடித்துள்ளார். 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சிறப்பு தபால்தலை வெளியிட முடிவு செய்யப்பட்டது. மம்மூட்டியின் உருவம் பொறித்த அந்த தபால் தலையை ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூட் சார்டர் எம்.பி. ஆகியோர் பங்கேற்று வெளியிட்டனர். அதனை இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்பிரீத்ரீ த்வோரா பெற்றுக் கொண்டார். இது குறித்து மம்மூட்டி கூறும்போது, ‘ஆஸ்திரேலியா நாடு எனக்கு அளித்த இந்த கவுரவத்தை பெரும் பெருமையாக கருதுகிறேன். இது எனது நாட்டுக்கு கிடைத்த பெரும் பேராகவும் நினைக்கிறேன். இந்த கவுரவத்தை எனது ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.
151