சென்னை: சபரிமலை ஐயப்பனின் மகிமைகளை மையப்படுத்தி, குடும்பப் பாசத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ஐயப்பன் துணை இருப்பான்’. ஜி3 ஆலயா சார்பில் டி.ஏ.மகா கணேசன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கி இருக்கிறார். ஐயப்பன் வேடத்தில் மாஸ்டர் சி.வி.குரு பிரசாந்த் நடித்துள்ளார். மற்றும் எம்.ராமசாமி, முத்துக்குமாரசாமி, வசந்த், அழகு ராஜா, குரால் எஸ்.ராமமுத்து, நந்தினி, கண்ணகி நடித்துள்ளனர். துருகம் சகா ஒளிப்பதிவு செய்ய, சதாசிவ ஜெயராமன் இசை அமைத்துள்ளார். சின்ன சேலம், காளசமுத்திரம், நயினார்பாளையம், சின்னாவரம், கல்வராயன் மலைப்பகுதி, குரால் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
203