லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கிரிஸ்டோபர் நோலன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘ஓப்பன்ஹைமர்’. வித்தியாசமான திரைக்கதையை கையாளும் கிரிஸ்டோபர் நோலன், இம்முறையும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கிய படம் தான் இது. இப்படத்தில் சில்லியன் மர்பி, ஃப்ளோரன்ஸ் புக் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலக அளவில் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இதையடுத்து வசூலிலும் இந்த படம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ.1,435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
62