சென்னை: டூ ஓவர்’ என்ற படத்துக்காக திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ள இயக்குனர் ஷார்வி, ‘பெட்டர் டுமாரோ’ என்ற படத்தை எழுதி இயக்குகிறார். மிகவும் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் பெண்ணின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு போராடும் அவருடைய சகோதரரின் வாழ்க்கையையும் படம் விவரிக்கிறது. ‘போதைப்பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நபர்களுக்கு தைரியத்தை அளிக்க படம் முயற்சித்து இருக்கிறது’ என்றார், ஷார்வி. இதில் மானவ், கவுரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஷ் தர்மராஜ், சரவணன் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷார்வி இயக்கி இருக்கிறார். பி.ஜீ.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்ய, குமாரசாமி இசை அமைத் துள்ளார். பிரேமா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சைலேந்திர சுக்லா தயாரிக்க, சரவணன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
110