சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் ஆன்மிக பயணம் ேமற்கொண்டிருக்கிறார். நடிகைகள் ஒரு கட்டத்தில் லைம்லைட்டிலிருந்து விலகி, ஆன்மிகம் பக்கம் செல்ல விரும்புகிறார்கள். அமலா பால், சமந்தா, சமீரா ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்பட பல நடிகைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆன்மிகத்தில் மூழ்கினால் தங்களுக்கு மன அமைதி கிடைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வரிசையில் நடிகைகள் ரம்யா பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இணைந்துள்ளனர்.
ரம்யா பாண்டியன் தனது சகோதரியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் மற்றும் மற்றொரு சகோதரி சுந்தரியுடன் திருவண்ணாமலைக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை சிவன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அதன் பின் கிரிவலம் சென்றோம், முதல் முறையாக எனது சகோதரிகளுடன் கிரிவலம் சென்றது புதுமையான அனுபவமாக இருந்தது, மிகவும் அமைதியான, அழகான ஆன்மீக அனுபவம் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.