ஐதராபாத்: ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரூ.1 கோடி கேட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்துள்ளார் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போதும் ஹீரோயினாக நடிக்கிறார். அவ்வப்போது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வௌியிட்டு வருகிறார். இந்நிலையி சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஸ்ரேயாவிடம் பேசப்பட்டது. அப்போது ரூ.1 கோடி சம்பளம் கேட்டு ஸ்ரேயா அதிர்ச்சி தந்துள்ளார். ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கும்போதே ஸ்ரேயாவுக்கு இந்த தொகை சம்பளமாக தரப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது, வெறும் ஒரு பாடலுக்கு 1 கோடி கேட்பதா என தயாரிப்பாளரும் படக்குழுவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த தகவல் சிரஞ்சீவியிடம் தெரிவிக்கப்பட்டதாம். நமக்கு படத்துக்கான செலவு முக்கியம். தயாரிப்பாளர் கஷ்டப்படக்கூடாது. அதனால் ஸ்ரேயா வேண்டாம் என சிரஞ்சீவி நாசுக்காக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
172