சென்னை: ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், எஸ்.கதிரேசன், அலங்கார் பாண்டியன் தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ், ஹீரோயினாக நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது: அனைத்து மாநில எல்லைகளையும் தாண்டி ரசிகர்களைச் சென்றடையும் பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. கார்த்திக் சுப்ப ராஜ் இயக்கிய படங்கள் எந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என்று இதற்கு முன்பு நான் பார்த்து இருக்கிறேன். அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணனே படம் குறித்து நிறைய பேசியுள்ளார் என்றால், படத்தின் கதையும், காட்சிகளும், எங்கள் நடிப்பும் அவரை அவ்வளவு ஆழமாகப் பேச வைத்துள்ளதாக நம்புகிறேன். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த நான், நடிப்பில் பிசியான பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இறைவன் அற்புதமான பல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். தற்போது நான் ஒரு நல்ல நடிகனாக நீடித்து வருவதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணமாகும். அதற்காக கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி சொல்கிறேன். தற்போது நான் எந்தப் படமும் இயக்கவில்லை.
179