ஐதராபாத்: அனுஷ்காவை மருமகளாக ஏற்றுக்கொள்ள பிரபாஸ் குடும்பத்தாரிடம் பேசியிருக்கிறார் ராஜமவுலி. தெலுங்கில் ‘மிர்ச்சி’ படத்தில் நடித்தபோது, பிரபாஸுடன் நட்பாக பழக ஆரம்பித்தார் அனுஷ்கா. ‘பாகுபலி’ படங்களின் இரு பாகங்களில் நடித்தபோது, இந்த நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் இந்த காதலை அனுஷ்கா குடும்பம் ஏற்றுக்கொண்டது. ஆனால் ஜாதக பொருத்தமின்மை காரணமாக, பிரபாஸ் குடும்பம் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு கோயில்களுக்கு சென்ற அனுஷ்கா தோஷம் நீங்க யாகங்கள் நடத்தினார். சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டார். ஆனாலும் பிரபாஸ், அனுஷ்கா காதல் வாழ்க்கைக்கு விடிவு ஏற்படவில்லை. இந்நிலையில், அனுஷ்காவுக்கு இந்த ஆண்டு 44 வயது ஆகிறது. பிரபாசுக்கு 45 வயது ஆக உள்ளது. இந்நிலையில் இந்த காதலை சேர்த்து வைக்க பிரபாஸ் குடும்பத்தாரிடம் ‘பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலி பேசினாராம். பிரபாசுக்கு நல்ல நண்பராகவும் அனுஷ்காவின் நலம் விரும்பியாகவும் ராஜமவுலி இருக்கிறார். அதனாலேயே அவர், இவர்களின் திருமணம் சம்பந்தமாக பேசி, சீக்கிரம் இருவருக்கும் நிச்சயம் செய்யலாம் என சொன்னாராம். ஆனால் இந்த விஷயத்தில் பிரபாஸ் குடும்பத்தார் பிடி கொடுக்காமல் இருப்பதாக ராஜமவுலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.