சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் வாணி போஜன். முதன் முதலாக விதார்த் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் இதுவரை வெளிவரவில்லை. அதன்பிறகு ஓ மை கடவுளே, லாக்அப், மகான், மிரள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் வெளியானது. இதில் அவர் விக்ரம் பிரபு ேஜாடியாக நடித்தார். தற்போது தாழ் திறவாய், பகைவனுக்கு அருள்வாய், லவ், ஆர்யன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ‘தாய் வீடு(சின்னத்திரை) எப்போதும் தாய் விடுதான். நான் இப்போது புகுந்த வீட்டில் (சினிமா) கவுரவமாக நடத்தப்படுகிறேன். இங்கே எனக்கு எந்தக் குறையும் இல்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எந்தக் கதையிலும் நான் நடிக்க மாட்டேன். திரையுலகில் என்னைப் புரிந்துகொண்டு மரியாதையுடன் நடத்துகிறவர்கள் அதிகம். அதேநேரம், என்னை இன்னும் சின்னத்திரையின் மகளாகவே பார்க்கிறார்கள்’ என்றார்.