சென்னை: பிருத்விராஜுடன் ‘லிப் டு லிப்’ முத்தக் காட்சியில் நடித்தது ஏன் என்பதற்கு அமலா பால் பதிலளித்துள்ளார். எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவல்தான் ‘ஆடு ஜீவிதம்’ என்ற பெயரில் மலையாளத்தில் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிளெஸ்சி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வௌியிடப்பட்டது. இதில் பிருத்விராஜுடன் ‘லிப் டு லிப்’ முத்தக் காட்சியில் அமலா பால் நடித்திருக்கிறார். இது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அமலா பால் கூறியது: கேரளாவில் திருமணமான புது தம்பதியாக நானும் பிருத்விராஜும் நடித்துள்ளோம். கடன் பிரச்னையில் சிக்கும் பிருத்விராஜ், வேலை தேடி சவுதிக்கு செல்கிறார். அங்கிருக்கும் சிலரால் அவர் ஏமாற்றப்பட்டு, ஆடு மேய்க்கும் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்.
அவரிடமிருந்து பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொள்கிறார்கள். அவரை அடிமை போல் நடத்துகிறார்கள். இப்படி கதை செல்கிறது. புதுமண தம்பதி என்பதால் அந்த அன்பு பரிமாற்றத்தில் அழகிய நினைவுகளைத்தான் தனது துக்க வேளையிலும் பிருத்விராஜ் நினைத்திருப்பார். அவரது நினைவில் வந்து செல்லும் ஒரு காட்சிக்காக முத்தம் கொடுக்கும் வகையில் நடிக்க டைரக்டர் கூறினார். படப்பிடிப்புக்கு முன்பே என்னிடம் இந்த காட்சியை பற்றி விளக்கமாக சொன்னார்கள். கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிக்க கூட நான் தயங்கியதில்லை. அதை ஆடை படத்திலேயே ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, ‘லிப் டு லிப்’ காட்சியில் நடித்ததும், கதைக்கு தேவைப்பட்டதால்தான். இவ்வாறு அமலா பால் கூறினார்.