சென்னை: ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தில் கைதி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் ஜெயம்ரவி. படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான பர்ஸ்ட் சிங்கிளில் ஜெயம்ரவி மற்றும் அனுபமாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
படம் குறித்து இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் கூறியது: ஒரு சம்பவத்தால் சிறைக்கு செல்லும் ஜெயம் ரவி 16 ஆண்டுகள் கழித்து பரோலில் வருகிறார். அவரது இளமை தோற்றத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். மிடீல் ஏஜ் கேரக்டரில் அவருடன் மோதும் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகள், ரசிகர்களை அதிகமாக ஈர்க்கும். காரணம், படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லன் கீர்த்தி சுரேஷ். கீர்த்திக்கு வில்லன் ஜெயம் ரவி. கதைக்கு மெயின் வில்லன் ஒருவர் இருந்தாலும் இவர்களின் வில்லத்தனம் பேசப்படும். மற்ற ஜெயம் ரவி படங்களுடன் ஒப்பிடும்போது, இதில் ஜெயம் ரவியின் லுக்கே இது வித்தியாசமான படம் என்பதை காட்டிவிடும். காரணம், இதற்கு முன் அவர் இதுபோல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிடில் ஏஜ் ஹீரோவாக நடித்ததில்லை. படத்தில் ஆக்ஷன் இருந்தாலும் பேமிலி எமோஷன் அதிகமாக இருக்கும். கம்பீரமான போலீஸ் வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருந்துவாரா என சந்தேகப்படவே தேவையில்லை. அவர் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். இவ்வாறு அந்தோணி பாக்யராஜ் கூறினார். சுஜாதா விஜயகுமார் உடனிருந்தார்.