மும்பை: பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படத்தை நிஷா பஹுஜா இயக்கியுள்ளார். ரஞ்சித் என்ற விவசாயி, தனது 13 வயது மகள் கிரண் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டி போராடுவதே ஆவணப்படத்தின் கதை. இது ஜார்கண்ட் மாநிலம் பெரோ மாவட்டத்தில் நிகழ்வதாக காட்டப்பட்டுள்ளது. இம்மாதம் நடக்கும் 96வது ஆஸ்கர் இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் இந்த ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறியதாவது: ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படத்தின் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் உலகளாவிய விநியோக உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. நிஷா பஹுஜா இயக்கிய இப்படத்தை 2022ல் நான் முதன்முதலில் பார்த்தபோது, தனது மகளுக்கு நீதி கிடைக்கப் போராடும் ஒரு தந்தையின் துணிச்சல் என்னைப் பெரிதும் பாதித்தது. அதனால்தான் இதை தயாரித்தேன்.
107