கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘தெய்வத்திருமகள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சாரா. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார். மீண்டும் அவர் சாராவை தனது ‘சைவம்’ படத்தில் நடிக்க வைத்தார். ஹலிதா ஷமீம் இயக்கிய ‘சில்லுக்கருப்பட்டி’, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்த சாராவை விரைவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்துவதாக ஏ.எல்.விஜய் சொன்னார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சாரா போன்ற குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பது மிகவும் எளிது. அவர்களின் மூளை மிகக்கூர்மையாக வேலை செய்யும்.
சாராவும் அப்படித்தான். நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு இயல்பாக நடிப்பார். அது நடிப்பாக இல்லாமல், ஒரு குடும்பத்தில் சிறுமி ஒருத்தி வாழ்வது போல் இருக்கும். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சாராவை மணிரத்னம் தெய்வீக அழகுடன் சித்தரித்துள்ளார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் வரும் 2025ல் தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறேன். தற்போது அவருக்குப் பொருத்தமான ஒரு கதையை எழுதி வருகிறேன். பிற்காலத்தில் மிகச்சிறந்த நடிகையாக சாரா புகழ்பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது’ என்றார்.