அண்மையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டார் நயன்தாரா. கடந்த 10 ஆண்டுகளாக நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நயன்தாராவுக்கு சிறப்பு விருது வழங்கி கவரவித்தார்கள். இயக்குநர் மணிரத்னம் தான் நயன்தாராவுக்கு விருது வழங்கினார். மேடைக்கு வந்த நயன்தாரா மணிரத்னத்தின் காலை தொட்டு கும்பிட்டார். நாடே கொண்டாடும் மணிரத்னம் கையால் விருது பெறுவதில் மகிழ்ச்சி என்றார். அதன் பிறகு நயன்தாரா சொன்ன விஷயம் தான் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
நயன்தாரா கூறியதாவது, எல்லா நடிகைகளை போன்று எனக்கும் மணிரத்னம் சார் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது சில காரணங்களால் அது நடக்கவில்லை. இனியாவது மணி சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.