சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த ‘பையா’ என்ற படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இதுபற்றி கார்த்தி கூறுகை யில், ‘இப்படத்தின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும், குழப்பம் இல்லாத திரைக்கதை ஓட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், தமன்னாவின் நடிப்பும் நம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். ‘பையா’ ரீ-ரிலீஸ் எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்து இருக்கிறது’ என்றார்.
பிறகு தமன்னா வெளியிட்டுள்ள பதிவில், ‘14 வருடங்களுக்கு பிறகும் கூட ‘பையா’ படத்தின் மீதான அன்பு குறையாமல் இருப்பதை பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கிறது. படம் மீண்டும் ரிலீசாவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். படத்தின் மேஜிக்கை தியேட்டர் களில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். லிங்குசாமி, கார்த்தி மற்றும் படக் குழுவுக்கு நன்றி’ என்று கூறினார்.