எனக்கு தேடி வரும் கதையில் நான் நடித்து வருகிறேன் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். 2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக. கிஸி கி ஜான் கிஸி கி பாய் படத்தில் நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
பூஜா ஹெக்டே கதை தேர்வு செய்யும் முடிவு குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர்; நான் ஒன்றும் சினிமா குடும்ப பின்னனியில் இருந்து நடிக்க வரவில்லை. என்னை தேடி ஒரு நாளைக்கு 20 கதைகள் வருவதற்கு நான் சாதாரண குடும்பத்தில் இருந்து நடிக்க வந்துள்ளேன். எனக்கு தேடி வரும் கதையில் நான் நடித்து வருகிறேன் என்று கூறினார்.