பெங்களூரு: கேஜிஎப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் யஷ், தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கும் அந்த படம் ‘டாக்சிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யாஷுக்கு ஜோடியாக இந்தி நடிகை கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கரீனா கபூர் இதில் நடிப்பது உறுதியானால், இது அவருக்கு முதல் தென்னிந்திய படமாக அமையும்.
மேலும், டாக்சிக் படத்தை பான் இந்தியா படமாக வெளியிட இந்தி ஹீரோயினை படக்குழு தேர்வு செய்துள்ளது. 43 வயதாகும் கரீனா கபூர் யஷை விட மூன்று வயது மூத்தவர். இருப்பினும், இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் படத்திற்கு எந்தவித தடையாகவும் இருக்காது என்று படக்குழு நம்புகிறது. தற்போது, கரீனா கபூர் இந்தியில் ‘தி காந்திநகர் கதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, சூர்யா படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.