சென்னை: ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ‘வால்டர்’, ‘ரேக்ளா’ படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரைக்கடர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘படை தலைவன்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. படத்தின் சில காட்சிகளுடன் இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.