மும்பை: உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மீது பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பலாத்காரம் செய்துவிட்டார் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்து பரபரப்பை கிளப்பியவர்தான் பாயல் கோஷ். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் இமைக்கா நொடிகள், லியோ மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா உள்ளிட்ட படங்களில் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப்புக்கு எதிரான புகாரை நடிகை டாப்ஸி உள்ளிட்டோர் எதிர்த்தனர். பாலிவுட்டில் யாருமே பயல் கோஷுக்கு ஆதரவு குரல் கொடுக்கவில்லை. நடிகை ரிச்சா சத்தாவை தேவையில்லாமல் அனுராக் காஷ்யப் விவகாரத்தில் இழுத்து விட்ட பயல் கோஷுக்கு எதிராக 1 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கை ரிச்சா சத்தா போட்டுள்ளார்.
அதன் பின்னர் ரிச்சா சத்தாவிடம் மன்னிப்புக் கேட்க அந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ‘கோப்ரா’ படத்தில் போலீஸ் அதிகாரியுமாக நடித்த இர்பான் பதான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார் என்றும் கடைசியாக அவருடன் மட்டும் தான் உல்லாசமாக இருந்தேன். அதன் பின்னர் 9 ஆண்டுகளாக யாருடனும் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. பல பெரிய நடிகர்கள் என்னுடன் நெருங்கிப் பழக ஆசைப்பட்டனர். ஆனால், நான் அதற்கு சம்மதிக்கவில்லை. திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி என்னை இர்பான் பதான் ஏமாற்றி விட்டார் என பயல் கோஷ் புகார் கூறியுள்ளார். இது தொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.