ஐதராபாத்: ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படத்துக்குப் பிறகு அஜய் பூபதி இயக்கியுள்ள ரஸ்டிக் திரில்லர் படம், ‘செவ்வாய்கிழமை’. இதை முத்ரா மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளது. முக்கிய வேடத்தில் பாயல் ராஜ்புத் நடித்துள்ளார். பான் இந்தியா படமான இது, வரும் நவம்பர் 17ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இப்படம் குறித்து அஜய் பூபதி கூறுகையில், ‘இதில் இடம்பெறும் ஒவ்வொரு கேரக்டரும் புதுமையாக இருக்கும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் கதை இருக்கும். பாயல் ராஜ்புத் கேரக்டர் ரசிகர்களை அதிர வைக்கும்’ என்றார்.
தயாரிப்பாளர் கூறுகையில், ‘இதற்கு முன்பு ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் அஜய் பூபதி புதிய டிரெண்டை உருவாக்கினார். அதுபோல், ‘செவ்வாய்கிழமை’ படமும் புதிய டிரெண்டை உருவாக்கும். 99 நாட்களில் 51 நாட்கள் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘காந்தாரா’ அஜனீஷ் பி.லோக்நாத் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கிய அஜய் பூபதி, கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பு ஏற்றுள்ளார். தவிர ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லஷ்மன் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். தாஜுதீன் சையத், ராகவ் வசனம் எழுதியுள்ளனர்’ என்றார்.