சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடக்க உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, நேற்று பகல் 12.15 மணியளவில், பயணிகள் விமானத்தில் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து லக்னோ புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி லதா மற்றும் குடும்பத்தினர் சென்றனர். அப்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அயோத்திக்கு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வது குறித்து அதிக மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 500 ஆண்டுகளாக இருந்து கொண்டிருந்த பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட் தலையிட்டு தீர்வு காணப்பட்டது. தற்போது ராமர் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது. இந்த கோயில் திறப்பு விழாவுக்கு மகிழ்ச்சியுடன் செல்கிறோம். இந்த நாள் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக இடம்பெற்றுள்ளது. மறக்க முடியாத நாள்’ என்றார். தவிர, தனுஷ் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் நேற்று அயோத்தி புறப்பட்டுச் சென்றார்.
161