சென்னை: கடந்த 1992ல் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான படம், ‘அமரன்’. தற்போது இத்தலைப்பு, சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். புதிய படத்துக்கு ஏன் பழைய தலைப்பு என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், ‘இப்படத்தின் திரைக்கதைக்கு நான் எழுதிய முதல் வார்த்தை ‘அமரன்’ என்பதாகும். இதற்கு ‘அழியாதவன்’, ‘போர்வீரன்’, ‘தெய்வீகமானவன்’ என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. இந்த நினைவுகூரத்தக்க தலைப்பை வழங்க சம்மதித்த அமரன் பட இயக்குனர் கே.ராஜேஷ்வர், கார்த்திக், கவுதம் கார்த்திக் ஆகியோருக்கு என் நன்றி’ என்றார். தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படம் உருவாக்கப்படுகிறது.
190