சென்னை: வெளிநாட்டிற்கு சென்று அங்கு தென்னிந்திய தம்பதி சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிற படமாக காழ் உருவாகியுள்ளது. யுகேந்திரன் வாசுதேவன், சித்தார்த் அன்பரசு, மிமி லீயோனார்ட், நித்யா பாலசுப்பிரமணியன் நடித்துள்ளனர். மோகன்ராஜ் வி.ஜே. எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து செல்வா கதிரேசன், கிருஷிக்கா தயாரித்துள்ளனர். வசந்த் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹெல்வின் கே.எஸ்., சஞ்சய் அரக்கல் இசையமைத்துள்ளனர். பட சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் சீமான் பேசும்போது, ‘காலம் காலமாக துரோகங்களையே அனுபவித்த ஒரு இனம், வெளிநாட்டுக்கு சென்றும் பிரச்னைகளை சந்திக்கிறது. இனம் சார்ந்தவர்களே துரோகம் செய்தாலும் வெள்ளைக்காரன் உதவுகிறான் என்றெல்லாம் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். படம் யதார்த்தமாக இருக்கிறது’ என்றார். இயக்குநர் மோகன்ராஜ் பேசும்போது, ‘தமிழர்களின் வலியை பற்றி இதில் பேசியிருக்கிறேன். முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கியுள்ளோம்’ என்றார்.
170