சென்னை: ‘பேராண்மை’, ‘கண்ணை நம்பாதே’, ‘தலைக்கூத்தல்’ உள்பட பல படங்களிலும், ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற வெப்தொடரிலும் நடித்துள்ள வசுந்தரா, வில்லியாக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இனிமேல் சவாலான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். ஹீரோயின் என்றால் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படத்தில் மட்டுமே நடிக்க முடியும். ஆனால், எதிர்மறை கேரக்டரில் நடிக்கும்போது, நம் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கும். அதுபோல் நடித்தும் இருக்கிறேன். மக்களும் அந்த கேரக்டரை ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டனர். இப்போது மல்டி ஸ்டாரர் கதையில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறேன். இப்படம் பெண்களை மையப்படுத்தி மாடர்ன் கிரைம் டிராமாவாக உருவாகிறது. ‘பப்கோவா’ என்ற வெப்சீரிஸை இயக்கிய லட்சுமி நாராயணன் ராஜூ இப்படத்தை இயக்குகிறார்.
93