பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், பல வருடங்களாக நடித்து வரும் நிலையில், இன்னும் ஒரு வெற்றிகரமான ஹீரோவாக மாற முடியவில்லை. வாரிசு அரசியல் குறித்த பரபரப்பான விவாதங்கள் பாலிவுட்டில் நடந்து வரும் நிலையில், அது பற்றி அபிஷேக் பச்சன் கூறியதாவது:இதுவரை அப்பா எனக்காக யாரிடமும் சிபாரிசு செய்ததில்லை. என்னை வைத்து படம் தயாரித்ததில்லை. நான்தான் அப்பாவை வைத்து, ‘பா’ என்ற இந்தி படம் தயாரித்தேன். இது ஒரு வியாபாரம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதல் படத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அந்த படம் ஓடவில்லை என்றாலோ உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. இதுதான் கசப்பான உண்மை. எனது படங்கள் ஓடவில்லை என்றால், உடனே அந்த விஷயம் எனக்கு தெரியும். நான் எந்தெந்த படங்களில் மாற்றப்பட்டு இருக்கிறேன் என்றும் தெரியும்.நான் நடிக்கிறேன் என்பதால், அதற்கான முதலீடு செய்ய யாரும் முன்வராமல், எந்தெந்த படங்கள் உருவாக்கப்படவில்லை என்பதும் தெரியும். இதையெல்லாம் மேலோட்டமாக பார்ப்பவர்கள், ‘அமிதாப் மகன், பிறக்கும்போதே செல்வச்செழிப்புடன் பிறந்தவன்’’ என்று சொல்வார்கள். அது பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.
அப்பா அமிதாப் எனக்கு சிபாரிசு செய்வதில்லை: சொல்கிறார் அபிஷேக் பச்சன்
0 comment
33