நமீதாவுக்கும் நடிகர் வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அவற்றை நெட்டில் வெளியிட உள்ளதாகவும் வாலிபர் ஒருவர் கூறி இருக்கிறார். மேலும் ஆபாசமான பதிவுகளையும் அந்த நபர் வெளியிட்டுள்ளார். அதைகண்டு கோபம் அடைந்த நமீதா அந்த நபருக்கு பதிலடி தந்திருக்கிறார். ‘சின்னபுத்திக்காரர் என்பதை இந்த நபர் நிரூபித்திருக்கிறார். நீ வைத்திருப்பதாக கூறும் ஆபாச படத்தை வெளியிடு பார்க்கலாம். சினிமா என்ற கிளாமர் துறையில் இருப்பதால் என்னை பற்றி நீ தெரிந்தது போல் பேசுகிறாய். எனது அமைதியை என்னுடைய பலவீனம் என்று தப்புக்கணக்கு போடாதே. பெண்களுக்கு மரியாதை தர கற்றுக்கொள்’ என கூறியிருப்பதுடன் தன்னை மிரட்டியவர் பெயர் செந்தமிழ் என்றும், அந்த நபரின் படத்தையும் சமூகவலைத்தளத்தில் நமீதா வெளியிட்டுள்ளார்.
ஆபாச படத்தை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டல்; நமீதா தடாலடி
0 comment
32