ஐதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. ரூ.350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ 2ம் பாகத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்ட நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு ராஜமவுலி பதில் கூறியுள்ளார். ‘நானும் என்னுடைய தந்தை விஜயேந்திர பிரசாத்தும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படும். விஜயேந்திர பிரசாத் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறார்’ என கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமவுலி தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அமேசான் காடுகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் 2வது பாகத்தை ராஜமவுலி தொடங்குவார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆருக்கு பதில் வேறு ஹீரோக்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
ஆர்ஆர்ஆர் படத்தின் 2வது பாகம் வெளியாகும்: ராஜமவுலி தகவல்
0 comment
32