விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி படங்களை இயக்கியவர் பேரரசு. அஜீத் நடித்த திருப்பதி படத்தையும் இயக்கினார். சமீபகாலமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் பதிவிட்டார். அதில்,’பதவிவெறி பிடித்தவர் மத்தியில் பதவிக்கு ஆசைப் படாதவன் பைத்தியக்காரன். மதவெறியை தூண்டிவிடுபவர் மத்தியில் மத ஒற்றுமையை விரும்புபவன் மடையன். மக்கள் மடையர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் மக்களுக்கு எழுச்சி வரவேண்டும் என்று நினைப்பவன் முட்டாள். வாழ்க தமிழகம்?? என கண்மூடித்தனமாக திட்டி தீர்த்திருக்கிறார். பேரரசுவின் திடீர் கோபத்துக்கு என்ன காரணம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் காரணமே சொல்லாமல் இந்த போடுபோட்டிருக்கிறார் என கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.
32