32
சாந்தனு நடிக்கும் படம், இராவணகோட்டம். இதை மதயானைக்கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்குகிறார். கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. இதுகுறித்து சாந்தனு கூறியதாவது: கண்ணன் ரவி சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவர் என்றாலும், சினிமா மீது கொண்ட காதலால் இப்படத்தை ஆர்வத்துடன் தயாரிக்கிறார். முழு கதையும் கொளுத்தும் கோடை வெயிலில் நடக்கிறது.
கடந்த ஆண்டு கோடையில் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்து விட்டோம் என்றாலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை முடித்துவிடலாம் என்று நாங்கள் சொன்னபோது தயாரிப்பாளர் ஏற்கவில்லை. மீண்டும் கோடை காலத்துக்காக காத்திருந்தோம். இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கிவிட்டது. எனவே, படத்தை முடிக்க முடியவில்லை. தற்போது அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைத்ததும், நன்றாக வெயில் கொளுத்தும் நாட்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.