சந்தானம் நடித்த டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நாளை திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் 2 படங்கள் ஒரேநாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், 2 படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில் டகால்டி படம் நாளையும், சர்வர் சுந்தரம் படம் வரும் பிப்ரவரி 14ம் தேதியும் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.இதுகுறித்து சங்கத்தின் ஆலோசனைக்குழு தலைவர் பாரதிராஜா கூறுகையில், ‘இரண்டு தயாரிப்பாளர்கள் தரப்பிலும் நியாயம் இருக்கிறது. இருவரும் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படங்களை உருவாக்கி இருக்கின்றனர். இந்த காலத்தில் படம் தயாரிப்பதை விட, அதை கொண்டு போய் சேர்ப்பதுதான் மிகவும் கடினமானது. இதுபோன்ற பிரச்னையில் எங்கள் தீர்ப்பை விட, அதை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்களின் செயல் பாராட்டுக்குரியது’ என்றார்.
32