சென்னை: வெளிநாடு சென்றிருந்த நடிகர் அஜித், நேற்று சென்னை திரும்பினார். துணிவு படத்தில் கடைசியாக நடித்திருந்தார் அஜித். படம் வெளியாகிவிட்டதால், குடும்பத்துடன் ஜார்ஜியாவுக்கு அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது. கடந்த 10 நாட்களாக வெளிநாட்டிலேயே அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.அஜித் அடுத்து நடிக்க உள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இதையடுத்து மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக லைகா நிறுவனம் மகிழ் திருமேனியிடம் பேசி வருகிறது. இப்போது அஜித் சென்னை திரும்பிவிட்டதால், மகிழ் திருமேனி, அஜித்தை சந்தித்து கதை கூறுவார் என தெரிகிறது. அதன் பிறகே அவர் இந்த படத்தை இயக்குவது உறுதியாகும்.
31