காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் பெயரில் ரீமேக் செய்து இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். இதில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே திருநங்கைகளுக்காக காப்பக இல்லம் ஒன்றை லாரன்ஸ் சென்னையில் கட்ட இருக்கிறார். இது பற்றி அறிந்ததும் தனது சார்பில் இந்த இல்லம் கட்ட, ரூ.1 கோடியே 50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் அக்ஷய் குமார். இது பற்றி லாரன்ஸ் கூறும்போது, ‘இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்காக இல்லம் கட்டுகிறேன். எனது அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழாவையொட்டி இந்த பணிக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இது பற்றிய தகவலைத்தான் அக்ஷய் குமாரிடம் சொன்னேன். அவர் உடனடியாக ரூ.1.50 கோடி அளிப்பதாக தெரிவித்தார். அவருக்கு நன்றி’ என்றார்.
திருநங்கைகள் இல்லம் கட்ட ரூ.1.50 கோடி கொடுத்த அக்ஷய் குமார்
0 comment
31