திருமணத்துக்கு வாங்க என்று அழைப்பிதழ் கொடுத்தவர்களையெல்லாம் திருமணத்துக்கு வரவேண்டாம் என்று சொல்ல வைத்திருக்கிறது கொரோனா வைரஸ். தெலுங்கு நடிகர் நிதின், வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி தனது திருமணத்தை துபாயில் தடபுடலாக நடத்த திட்டமிட்டிருந்தார். கொரோனா வைரஸ் பயத்தால் துபாய் திருமணத்தை ரத்துசெய்துவிட்டு ஐதராபாத்திலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார். அதேபோல் தமிழ் நடிகை ஒருவரும் திருமணத்துக்கு வரச் சொல்லி அழைப்பு கொடுத்து விட்டு தற்போது யாரும் வரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் வவ்வால் பசங்க. இதில் கதாநாயகியாக நடித்தவர் உத்ரா உன்னி. மலையாளத்திலும் நடித்திருக்கிறார். உத்ராவுக்கும் நிதிஷ் நாயருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து திருமணம் ஏற்பாடானது. புதுமணத் தம்பதிகள் திருமண கொண்டாட்டம், திருமண தாலி கட்டும் நிகழ்ச்சி என தனித்தனியாக விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பதுடன் தாலி கட்டும் நிகழ்வை கோயிலில் நடத்த முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி உத்ரா உன்னி வெளியிட்டுள்ள மெசேஜில்,’கொரோனா வைரஸ் பரவி வருவதால் எங்களது திருமண கொண்டாட்ட விழாவை தள்ளி வைத்திருக்கி றோம். கொரோனா தொற்று சூழல் முடிவுக்கு வந்த பிறகு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படும். எங்களது திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசவுகரியத்துக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அதேசமயம் திருமண தாலி கட்டு நிகழ்ச்சி மட்டும் அதேதேதியில் கோயிலில் நடக்கும். அதுபற்றிய விவரங்களை இணைய தளம் வாயிலாக தொடர்ந்து தெரிவிப்பேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம்; நடிகை திடீர் கோரிக்கை
0 comment
33